அப்பளம் போல் நொறுங்கிய பேருந்து: 6 பேர் பலி - தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து!1780246639
அப்பளம் போல் நொறுங்கிய பேருந்து: 6 பேர் பலி - தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து! செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கம் அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும், லாரியும் பயங்கரமக மோதிக் கொண்ட விபத்தில் இரு பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள அச்சரப்பாக்கம் தொழுப்பேடு பகுதியில் சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்த அரசு பேருந்தும்,அதே சாலையில் சென்றுக்கொண்டிருந்த லாரியும் எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதிக்கொண்ட விபத்தில் , பேருந்து அப்பளம் போல் நொறுங்கியது. இவ்விபத்தில் பேருந்தில் பயணித்த 2 பெண்கள் உட்பட 6பேர் சம்பவ இடத்தில் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் பேருந்தில் பயணித்தவர்களில் பத்திற்கு மேற்பட்டோர் படு காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த வந்த அச்சரபாக்கம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் பேருந்தில் இருந்து உயிரிழந்தவர்களின் உடல்கள் மற்றும் பயணிகளை மீட